அல்லாஹ்_விபச்சாரத்தை #விதியாக்கினாரா..?

 வஅஸ்ஸலாமு அவைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.....


1)பாவ மீட்பு எப்படி வருகிறது..?


2) #அல்லாஹ்_விபச்சாரத்தை #விதியாக்கினாரா..?


3)விதி என்றால் என்ன..?


4)விபச்சாரத்தை விதியாக்கிய இயேசு...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#மனிதனின்_பாவமும்_அதனின் #மீட்சியும்_முதலில்_பார்க்கலாம்....


இஸ்லாம் பாவங்களை குறித்து சொல்லும் போது இரு வகைகளாக பிரிக்கிறது ...


1)பெறும் பாவங்கள்


2)சிறு பாவங்கள் 


இரு வகை உள்ளன..


இஸ்லாத்தை பொறுத்த வரை உலகில் பிறந்த மனிதர்களில் பாவம் செய்ய கூடியவர்கள் தான் 


#ஆனால்


இறைவன் பாவ மீட்சி அடைய இரு வழிகளை இறைவன் இஸ்லாத்தில் காட்டித் தந்து உள்ளான்...


#அவை


#அல்லாஹ்_பாவிகளை_நேர்வழியில் #நடத்தமாட்டார்...


80 குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.


திருக்குர்ஆன்  9:80


#தான்_செய்த_பாவத்தை_நினைத்து #மனம்_திரும்பினால்_அல்லாஹ் #மன்னிப்பவனாக_இருக்கிறான்...


135 அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுங்கள் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவன்


திருக்குர்ஆன்  3:135


இந்த இரு வசனங்களில் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கை பயணம் அமைகிறது ......


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


257. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான்


திருக்குர்ஆன்  2:257


இந்த வசனத்தின் அடிப்படையில் 


#இறைவனுக்கு_அஞ்சி_நம்பிக்கை

#கொண்டு_பெறும்_பாவங்கள்_

#செய்யாமல்_வாழந்தும் #இருக்கிறார்கள்...


இறைவன் நம்பிக்கையாளார்களுக்கு உதவி செய்பவனாக இருக்கிறான்..


தீர்க்கதரிசிகள் நபிமார்கள் இதற்க்கு முன் உதாரணமாக கூறாலாம்.....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இறைவன் கொடுத்த கட்டளைகளின் படி வாழந்து மரணித்து வெற்றி பெற்ற நம்பிக்கையான பல சமுதாய மக்கள் இருக்கிறார்கள் என்று பல இறைவன் இடங்களில் கூறியுள்ளான்


திருக்குர்ஆன் 2:137, 3:110, 3:113, 3:199


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#அல்லாஹ்_விபச்சாராத்தை_விதியாக்கி #இருக்கினாரா..?


மனிதன் எந்த? எந்த? பாவ காரியங்களில் மிகவும் பலவினமாக இருக்கிறான்..?


என்பதே இறைவனே அறிந்தவன்....


#உதாரணமாக


உலகில் பிறந்த ஒரு மனிதரை எடுத்துக் கொள்ளுவோம்


ஒரு மனிதன் தன் வாழ் நாளில் இறைவன் இன்னுது பாவம் என்று சொல்ல கூடிய அனைத்து பாவங்களையும் செய்பவனாக இருக்கிறானா.? என்று பார்த்தால் நிச்சயம் அனைத்து பாவங்களையும் செய்பவனாக இல்லை...


#உதாரணமாக


உலகில் எல்லா மனிதனும் இறைவனுக்கு இனை வைப்பது இல்லை


உலகில் எல்லா மனிதனும் பிறரை புறம் பேசி திரிவது இல்லை


உலகில் எல்லா மனிதர்களிலும் திருட்டில் இடுபடுவது இல்லை..


உலகில் எல்லா மனிதர்களும் கொலைகள் செய்வது இல்லை..


உலகில் எல்லா மனிதர்களும் பிற மனிதனை ஏமாற்றி மோசடி வியாபாராம் செய்வது இல்லை..


#ஆனால் 


ஒரு காரியத்தில் (பாவத்தில்) மனித இனம் மிக பலவீனமாக இருக்கும் என்று முன்னறிவு உள்ள இறைவன் இப்படியாக நமக்கு தெளிவு படுத்துகிறான்....


அது தான் #விபச்சாராம்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


மனிதன் விபச்சாரத்தில் மிக பலவீனமாக இருப்பான் என்பதே இறைதூதரின் முலம் இறைவன் நமக்கு முன்னறிவித்து இருக்கிறான்...


அந்த செய்தி 

👇👇👇👇👇


5165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு விதியில் எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். 

#கண்கள் செய்யும் விபசாரம் தவறான பார்வையாகும். 

#காதுகள் செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுகளைச் செவியுறுவதாகும். 

#நாவு செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சாகும்.

 #கை செய்யும் விபசாரம் அந்நியப் பெண்ணைப் பற்றுவதாகும். 

#கால் செய்யும் விபசாரம் தவறான உறவைத் தேடி அடியெடுத்து வைப்பதாகும். 

#மனம்_இச்சை கொள்கிறது; ஏங்குகிறது


#மர்ம_உறுப்பு_அதை #உண்மையாக்குகிறது 

           அல்லது 

👉 #பொய்யாக்குகிறது 👈

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 46. (தலை)விதி


இறைவன் நபி ஸல்அவர்களின் முலம் சொன்ன இந்த செய்தி மனித வாழ்க்கையில் விபச்சாராம் #எப்படி படி படியாக உன்மையாக்குகிறது என்பது இதில் தெளிவாக சொல்ல பட்டு உள்ளது 


நிச்சயம் ஒரு முறை மனிதனின் வாழ்க்கையில் கண் அல்லது காது கை கால்கள் முலம் விபசாரத்தை நடைமுறையில் படுத்தலாம் ஒரு சிலர் மட்டும் விபச்சாராத்தை மர்ம உறுப்பு முலம் உண்மையாக்குகின்றனர்..


ஒரு சிலர் அதை பொய்யாக மாற்றி தப்பிக்கவும் முடியும் இறைவன் நாடினால்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


விபச்சாரத்தில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்பதற்க்கு ஒரு யூசுஃப் நபியே உதாரணமாக கூறலாம்

👇👇👇👇👇

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு தன் விருப்பதிற்கு இணங்குமாறு “வாரும்” என்று அழைத்தாள் அதற்கு அவர் மறுத்து, “அல்லாஹ் இத்தீய செயலிலிருந்து என்னைக் காத்தருள்வானாக ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.


திருக்குர்ஆன் : 12:23,24


மனிதனிடம் தீடிர் என்று காம இச்சை எற்பட்டால் அல்லது அப்படி கால சூழ்நிலை எற்பட்டால் இறை அச்சம் இறை அடியார்களுக்கு பாதுகாக்கும்.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

                 ♥விதி மாறும்♥


நிச்சயம் விபச்சாராம் என்ற விதியில் இருந்து இறைவனின் பாதுகாப்பு தேடுவது முலம் நாம் மீட்பு அடைய முடியும் ...


பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது....


அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


நூல் : இப்னு மாஜா 87

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இச்சை என்பது மனிதனின் இயற்க்கையாக இருக்கிறது அது உலகில் உயிர் உள்ள ஜீவனுக்கும் இருக்கிறது....


இந்த விபச்சார விதியில் இருந்து மனிதன் எப்படி மீட்சி அடைவது என்று பார்ப்போம்....


1) விபச்சாராம் என்பது பாவம் என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்து உள்ளான்


திருக்குர்ஆன்  17:32


2)இறைவணக்கும் ஆகிய தொழுகை நோன்பு விபச்சாரத்தை தடுக்கும் என்று இஸ்லாம் கூறுகிறது


திருக்குர்ஆன் 11:114

முஸ்லிம் 5335

புகாரி 38


3)ஒரு மனிதன் அதிக பெண் ஆசை உள்ளவானாக இருப்பான் அவன் ஊருக்கு ஒரு மனைவி ஊருககு வெளியே சின்ன வீடு என்று இருப்பான் ஒரு சிலர் திருமணம் முடித்து மனைவி இருந்தும் விபச்சாரியிடம் செல்வார்கள் இப்படி பட்டவர்கள் விபச்சாரத்தின் பக்கம் சென்று விடாத படி பலதார மணம் செய்யலாம் இப்படி பட்ட திருமணஙகளுக்கு ஒரு சில விதி முறைகள் உள்ளது


திருக்குர்ஆன் 4:3


4)அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்க கூடாது என்கிறது..

புகாரி 5232


5)அந்நிய ஆண்களுடன் பயணம் செய்ய கூடாது

திருக்குர்ஆன் 33:32,33

முஸ்லிம் 2611


6)ஆண்களும் பெண்களும் பார்த்து ரசிப்பதை  இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது இதனால் தான் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் இஸ்லாம் கூறுகிறது 


திருக்குர்ஆன் 24:31


7)ஆண்களும் பெண்களும் ஆடைகளின் விசயத்தில் ஒழுக்கான ஆடைகளை அணியும் படி வழி காட்டி உள்ளது

திருக்குர்ஆன் 24:31


8)ஒரு அந்நிய பெண்னே பார்த்து ஆசை என்று வந்துவிட்டால் உன் மனைவிடம் சென்று பூர்த்தி செய்து கொள் என்று வழி காட்டுகிறது

புகாரி 2718


9)தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் பெண் உறவுகளையும் தடுக்கிறது

திருக்குர்ஆன் 7:81


10)மேலும் விபச்சாராம் செய்வது குற்றவியல் சட்டமாக இறைவன் ஆக்கி உள்ளான் அதற்க்கு தகுந்த தண்டனைகளாக சவுக்கடி தண்டனை மரணத்துக்கு் எதுவான கல்லேறி தண்டனைகளையும் இறைவன் கொடுத்து உள்ளான்...


திருக்குர்ஆன்  24:2


மனிதன் விபச்சார காரியத்தில் மிகவும் பலவினமானவன் என்று அறிந்த இறைவன் அதனை தடுக்கும் விதமாக இத்தனை காரியங்களை இறைவன் எற்படுத்தி இருக்கிறான் இந்த இறை கட்ளைகளின் படி மனிதன் கைக்கொண்டான் என்றால் விபச்சாராம் என்ற விதியில் இருந்து மனிதன் பாதுகாப்பு அடைய முடியும்....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கிறிஸ்தவகொள்கை படி பூமியில் பிறந்த ஒருவனும் யோக்கியன் இல்லை ....


♥விபச்சாராமும்_கிறிஸ்தவர்களும்♥


7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, 

யோவான் 8:7


8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். 

யோவான் 8:8


9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்....

யோவான் 8:9


கிறிஸ்தவர்கள் எப்போதும் தங்களை நல்லவங்க போல காட்டிக் கொள்வார்கள் ...


ஒரு பெண்னை மனதில் ஆபாசமாக கூட நினைக்காதவர்களை போல காட்டிக் கொள்வார்கள் அப்படி நினைத்தால் விபச்சாராம் என்று நினைக்கும் யோக்கிய சிகாமணிகள்...


அவர்கள் நல்லவர் என்றால் இயேசு நிறைவெற்ற சொன்ன கல்லெறிந்து கொலை செய் என்ற கட்டளையே நிறைவெற்றலாமே....?


மனிதன் ஒழுக்கமாக வாழ்ந்தான் என்றால் அவன் கல்லெறி தண்டனை கொடுக்கலாம்... 


மனிதன் விபச்சார விசயத்தில் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் இயேசுவின் காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்....


இயேசுவுக்கு தெரியும் மனிதன் நல்லவன் இல்லை என்று ....


.18 அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.


மாற்கு 10


இயேசுவும் நல்லவர் இல்லை ஏக தேவன் ஒருவரே நல்லவர்.......✍🏻

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்